நாகை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் பிரச்னையின்போது கடலில் தூக்கி வீசப்பட்ட 83 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
நாகப்பட்டினத்தில் இரு தினங்களுக்கு முன்பு பழைய மீன்பிடி துறைமுகத்தில் இரு தரப்பு மீனவர்களிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்னையின்போது கரையிலிருந்து இருசக்கர வாகனங்கள் கடலில் தூக்கி வீசப்பட்டன. தற்போது நாகையில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து, கடலில் தூக்கி வீசப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டன. இதுவரையில் 83 இரு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சில வாகனங்கள் கடலில் இருக்கலாம் என்பதால் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.