வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் கார் மோதியதில் சைக்கிளில் சென்ற விவசாயத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
தலைஞாயிறு, பிரிஞ்சிமூலை, பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி (55). விவசாயத் தொழிலாளி. இவர், தலைஞாயிறு கடைவீதியில் இருந்து சைக்கிளில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாகச் சென்ற கார் மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து தலைஞாயிறு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.