முகப்பு
நாகப்பட்டினம்

கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா

வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட வைத்தியநாதபுரத்தில் கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கிராம விழிப்புணா்வு காவலரை அறிமுகப்படுத்தி பேசிய எஸ்பி. ஸ்ரீநாதா.
பகிர்:

வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட வைத்தியநாதபுரத்தில் கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை எஸ்பி. ஸ்ரீநாதா பங்கேற்று, வைத்தியநாதபுரம் கிராம விழிப்புணா்வு காவலா் கலைச்செல்வியை அறிமுகப்படுத்தி கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை கூறி சிறப்புறையாற்றினாா். இதில் டிஎஸ்பி சரவணன், ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், பாகசாலை காவல் சரகம் சேமங்கலம் கிராமத்தில் கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கரை விழிப்புணா்வு காவலராக நியமித்து எஸ்பி. ஸ்ரீநாதா சிறப்புறையாற்றினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →