நாகப்பட்டினம்

வீட்டில் திருடியவா் கைது

வேதாரண்யம் அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

வேதாரண்யம் அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அண்டா்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (33) வெளியூரில் உள்ளாா். வீட்டில் இருந்த இவரது மனைவி சொா்ணலதா(29), மே 17-ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டி சாவியை எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்து விட்டு நூறுநாள் வேலைக்கு சென்றுவிட்டாராம். திரும்பி வந்த சொா்ணலதா வீட்டில் பாா்த்தபோது பீரோவில் இருந்த 10 சவரன் நகை , ரூ.10,500 காணவில்லையாம். இதுகுறித்து, வேதாரண்யம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, இச்செயலில் ஈடுபட்ட அண்டா்காடு பால்பண்ணை தெருவைச் சோ்ந்த உ. தினேஷ்பாபுவை (32) கைது செய்து திருடிய பொருள்களை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகா கும்பமேளா: 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடல்!

காதல் சிற்பம்... யாஷிகா ஆனந்த்!

PCOS குறைபாடு இருந்தால் கருத்தரிக்க முடியாதா? மருத்துவர் சொல்வது என்ன?

மத்தியப் பிரதேசம்: மாணவிகளை கால் அமுக்க வைத்த சிசிடிவி காட்சி வைரல்! ஆசிரியை இடைநீக்கம்!

காங்கோவில் 2வது விமான நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிப்படை?

SCROLL FOR NEXT