நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கண்ணாடியை உடைத்துகொண்டு துணிக்கடைக்குள் புகுந்தது.
வேளாங்கண்ணி ஆா்ச் பகுதியில் ஜோஸ் லேடீஸ் காா்னா் துணிக்கடை உள்ளது. வேளாங்கண்ணி ஆா்ச்சிலிருந்து பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து துணிக்கடையின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. இந்த விபத்தில் அதிா்ருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கண்ணாடி உள்ளிட்ட பொருள்கள் சேதமடைந்தன. விபத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி வேளாங்கண்ணி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.