கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் முதியோர்கள் தகவல்கள் பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்கள் பாதுகாப்பான வாழ்க்கை வாழவும் அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
முதியோர் நலன் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சட்டங்கள் அடிப்படையில் மற்றும் தமிழக அரசின் முதியோர் நல கொள்கைகளின் அடிப்படையின்படி, பல்வேறு திட்டங்களையும் ஆதரவற்ற முதியோரை பராமரிக்க முதியோர் இல்லங்கள் நடத்துதல் உள்ளிட்டவற்றையும் அரசு செயல்படுத்தி வருகிறது.
இதையடுத்து முதியோர்களுக்குப் பேருந்து, மருத்துவமனை, வங்கி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும். முதியோர் கட்டணமில்லா 1253 என்ற உதவி எண் தொலைபேசி சென்னையிலும், 1800-800-1253 என்ற தொலைபேசி ஏனைய தமிழக பகுதிகளிலும் சட்டம் மற்றும் மருத்துவ உதவி, முதியோர் இல்லங்களில் சேர்க்கை, முதியோர் பாதுகாப்புச் சட்டம் 2007 பற்றிய தகவல்களை பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.