மன்னார்குடி அருகே லாரி மோதி முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
மன்னார்குடி அருகே வடக்கு உடையார்தெருவைச் சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி (62). இவர் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் மன்னார்குடிக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பிச் சென்றபோது லாரி மோதி பலத்த காயமடைந்தார்.
உடனடியாக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி உயிரிழந்தார். இதுகுறித்து மன்னார்குடி காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.