திருவாரூர்

பேருந்து மோதி வேளாண்துறை அலுவலர் சாவு

குடவாசல் அருகே புதன்கிழமை தனியார் பேருந்து மோதியதில் வேளாண்துறை அலுவலர் உயிரிழந்தார்.

DIN

குடவாசல் அருகே புதன்கிழமை தனியார் பேருந்து மோதியதில் வேளாண்துறை அலுவலர் உயிரிழந்தார்.
கும்பகோணத்தை அடுத்த வேடச்சந்தூர், அம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்வில்சன் (44). இவர், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வேளாண்துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் வலங்கைமானிலிருந்து திருவாரூருக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை வந்துகொண்டிருந்தார். குடவாசலை அடுத்த அரசவணங்காடு அருகே வந்தபோது இருசக்கர வாகனம் மீது கும்பகோணம் சென்ற தனியார் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த டேவிட்வில்சன், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து, கோடியக்கரையைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் கண்ணதாசனை (34) தேடி
வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT