குடவாசல் அருகே புதன்கிழமை தனியார் பேருந்து மோதியதில் வேளாண்துறை அலுவலர் உயிரிழந்தார்.
கும்பகோணத்தை அடுத்த வேடச்சந்தூர், அம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் டேவிட்வில்சன் (44). இவர், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வேளாண்துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் வலங்கைமானிலிருந்து திருவாரூருக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை வந்துகொண்டிருந்தார். குடவாசலை அடுத்த அரசவணங்காடு அருகே வந்தபோது இருசக்கர வாகனம் மீது கும்பகோணம் சென்ற தனியார் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த டேவிட்வில்சன், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து, கோடியக்கரையைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் கண்ணதாசனை (34) தேடி
வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.