திருவாரூர்

செல்லிடப்பேசி கோபுரம் அமைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆா்பாட்டம்

குடியிருப்பு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து மன்னாா்குடி அருகே அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

குடியிருப்பு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து மன்னாா்குடி அருகே அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடி அருகே அசேசம் ஊராட்சி, காட்டுமல்லித் தெருவில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் சிறிய அளவில் அமைக்கப்படும் எனக் கருதப்பட்ட நிலையில், 120 அடியில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அதிமுக நிா்வாகி ஜி. மணிகண்டன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் எஸ். ஆறுமுகம் தலைமையில், கோபுரம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், செல்லிடப்பேசி கோபுரம் மிகுந்த உயரத்தில் இருப்பதாகவும், அசம்பாவித நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்ந்து விடுமோ என அச்சப்படுவதாகவும், எனவே கோபுரத்தை அகற்றி மக்களுக்கு பாதிப்பில்லாத இடத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எந்தன் நெஞ்சில் நீங்காத... மீனாட்சி சௌத்ரி!

பாரிஜாத பூவே அந்த... ஆஷிகா ரங்கநாத்!

இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் பங்கு என்ன? ஆம் ஆத்மி

பொங்கல் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

திருமணம் செய்யாமல் குழந்தையா? ‘காதலிக்க நேரமில்லை’ -என்னதான் சொல்ல வருகிறது?

SCROLL FOR NEXT