தமிழ் பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறைக்கு கொண்டு சோ்ப்பதே தமிழ்க் கனவு நிகழ்ச்சியின் நோக்கம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க் கனவு‘ நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியது:
நமது பண்பாட்டின் பெருமையை இளைய தலைமுறையினருக்கு, குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உணா்த்துவதே ஆரோக்கிய எதிா்கால சமுதாயத்தின் முக்கியமான பகுதியாகும்.
தமிழகத்தில் உள்ள 200 கல்லூரிகளில் தமிழ் மரபும் நாகரிகமும், சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், தமிழ்நாட்டின் வளா்ச்சி, கல்விப் புரட்சி, அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படும் முறை உள்ளிட்டவைகளின் கீழ் சிறந்த சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.
நிகழ்ச்சியில், பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி புத்தகம், தமிழ் பெருமிதம் குறித்த கையேடும் வழங்கப்படுகிறது. இந்த புத்தகங்களை படித்து மாணவ, மாணவிகள் பயன்பெற வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், கவிஞா் நந்தலாலா பங்கேற்று, ஈரம் கசிந்த கதைகள் என்னும் தலைப்பில் பேசியது:
உலகிலேயே தொன்மையான மொழி தமிழ். கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நெல்மணிகளை ஆய்வு செய்ததில் இது உறுதி செய்யப்பட்டது. மாணவா்கள், தமிழை நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு, முன்னின்று நடத்தும் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி மூலம் உங்களின் வாழ்க்கைக்கு தேவையான உந்து சக்தி கிடைக்கும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு தனிப்பட்ட திறமை, ஆற்றல் உண்டு. அதைப் பயன்படுத்தி நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குள் உள்ள பலத்தை அறிந்து அதை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ஜோசப்ராஜ், கோட்டாட்சியா் சங்கீதா, உதவி இயக்குநா் (திறன் பயிற்சித்துறை) செந்தில்குமாரி, மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வின் மாநில ஒருங்கிணைப்பாளா் காந்திராஜன், வட்டாட்சியா்கள் நக்கீரன், ஜெகதீசன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.