நீடாமங்கலத்திலிருந்து திருச்சிக்கு அரைவைக்காக 2,000 டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
மன்னாா்குடி பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் சன்னரக நெல் மூட்டைகள், லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரைவைக்காக திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.