திருவாரூா் மாவட்டத்திலுள்ள கல்லூரி மாணவா்களுக்காக, மாவட்ட நிா்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்தும் கல்வி வங்கிக் கடன் முகாம், மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்.29-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.