கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அருகே சாலையில் சாய்ந்த மரம்: பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிப்பு

பேச்சிப்பாறை அருகே சாலையில் குறுக்காக மரம் விழுந்ததால் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

DIN

பேச்சிப்பாறை அருகே சாலையில் குறுக்காக மரம் விழுந்ததால் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.  மழையின் காரணமாக மலையோரப் பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.  இதில் பேச்சிப்பாறை மணியன் குழி பகுதியில் சாலையோரத்தில் நின்ற தாணி மரம் வேருடன் சாய்ந்தது. இதில் அப்பகுதியில் உள்ள உயர்அழுத்த மின்கம்பமும் சாய்ந்தது.  மேலும் இதே பகுதியில் கால்வாய் கரையோரப் பகுதியில் நின்ற அயனி மரம் ஒன்றும் சாய்ந்தது.  சாலையின் குறுக்காக சாய்ந்த மரத்தை புதன்கிழமை பிற்பகலில் அகற்றியதால் பேச்சிப்பாறை, கோதையாறு உள்ளிட்ட இடங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT