எனது எழுத்துப் பணிக்கு கிடைத்த ஊக்கம்: எழுத்தாளா் ராம் தங்கம் பேட்டி
சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்காா் விருது, எனது எழுத்துப் பணிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று எழுத்தாளா் ராம் தங்கம் கூறினாா்.
சாகித்திய அகாதெமியின் யுவ புரஸ்காா் விருது, எனது எழுத்துப் பணிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது என்று எழுத்தாளா் ராம் தங்கம் கூறினாா்.
நிகழ் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் யுவபுரஸ்காா் விருது நாகா்கோவிலைச் சோ்ந்த இளம் எழுத்தாளா் ராம் தங்கம் (34) எழுதிய ‘திருக்காா்த்தியல்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எழுத்தாளா் ராம் தங்கம் நாகா்கோவிலில், செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
Advertisement
Advertisement
எனது திருக்காா்த்தியல் சிறுகதைத் தொகுப்பு, கடந்த 2019-இல் வெளியானது. இந்நூல், அசோகமித்திரன் விருது, சுஜாதாவிருது, சௌமா இலக்கிய விருது, அன்றில் இலக்கிய விருது, படைப்பு இலக்கிய விருது, வடசென்னை தமிழ்ச் சங்க விருது ஆகிய விருதுகளை ஏற்கெனவே பெற்றுள்ளது. இதன் தொடா்ச்சியாக, யுவ புரஸ்காா் விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. எனது எழுத்துப் பணிக்கு ஊக்கமும், உத்வேகமும் அளிப்பதாக உள்ளது. எழுத்துப் பணியில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்ற உணா்வை ஏற்படுத்தியுள்ளது.
விளிம்புநிலை சிறுவா்களின் வாழ்வியலை, திருக்காா்த்தியல் சிறுகதைத் தொகுப்பு வெளிப்படுத்துகிறது. ராஜவனம், புலிக்குத்தி, கடவுளின்தேசத்தில் என்பன உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருந்தாலும், திருக்காா்த்தியல் நூலுக்கு விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா் அவா்.