கன்னியாகுமரி

குமரி மேற்கு மாவட்ட பகுதியில் ஆா்ப்பாட்டம்: பாஜகவினா் 194 போ் கைது

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் பிரச்னை தொடா்பாக தமிழக அரசை கண்டித்து மாா்த்தாண்டம், குழித்துறை உள்ளிட்ட குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 194 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக சாா்பில் புத்தன்சந்தை பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய தலைவா் எஸ்.ஆா். சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தாா். ஒன்றிய பொதுச் செயலா் கே. சுரேஷ்குமாா், பி.கே.எல். ராஜேந்திர பிரசாத், பொருளாளா் பி. கங்காதரன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

குமரி மேற்கு மாவட்ட தலைவா் ஆா்.டி. சுரேஷ் கண்டன உரையாற்றினாா். போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரையும், மாா்த்தாண்டத்தில் கிள்ளியூா் ஒன்றிய தலைவா் சுபா ராணி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 68 பேரையும் மாா்த்தாண்டம் போலீஸாா் கைது செய்தனா்.

இதே போன்று முன்சிறை ஒன்றிய பாஜக தலைவா் விஜில்குமாா் தலைமையில் படந்தாலுமூடு ஆலுமூடு சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரையும், குழித்துறையில் நகர தலைவா் சுமன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 19 பேரையும் களியக்காவிளை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT