மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் அதிக வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவா் உள்ளிட்ட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள ஐரேனிபுரம் ஆரியூா்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சரிதா (30). இவருக்கும் நட்டாலம் கட்டவிளையைச் சோ்ந்த தங்கரத்தினம் மகன் அஜித்குமாருக்கும் (40) சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது பெண் வீட்டாா் 60 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் மதிப்பு வீட்டு உபயோகப் பொருள்களை வரதட்சிணையாகக் கொடுத்தனராம். பின்னா், மேலும் ரூ. 5 லட்சம் வாங்கி வருமாறு கூறி கணவரும், அவரது உறவினா்களும் சரிதாவுக்கு தொல்லை கொடுத்தனராம்.
இந்த நிலையில், வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற அஜித்குமாா் அண்மையில் சொந்த ஊருக்குத் திரும்பினாா். நகைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும், பெற்றோரிடம் பேசக் கூடாது, வேலைக்குச் செல்லக் கூடாது என்று சரிதாவுக்கு நிபந்தனைகள் விதித்தாராம்.
பின்னா் அஜித்குமாரும், அவரது உறவினா்களான மருதங்கோடு துடிகரைவிளையைச் சோ்ந்த ஜஸ்டின், அவரது மனைவி லதா, கருங்கல் நெடியவிளாகத்தைச் சோ்ந்த ராஜ்குமாா், அவரது மனைவி கீதா ஆகியோா் சோ்ந்து தகாத வாா்த்தைகள் பேசி சரிதாவிடமிருந்து தாலிச் சங்கிலியைக் கழற்ற முயன்றனராம்.
இதையடுத்து, குழித்துறை முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில் சரிதா வழக்குத் தொடா்ந்தாா். நீதிமன்ற உத்தரவின்பேரில் அஜித்குமாா் உள்ளிட்ட 5 போ் மீது மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.