இரு வாகனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியுடன் பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி.  
கன்னியாகுமரி

குளச்சலில் 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குளச்சலில் இரு வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

குளச்சலில் இரு வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் கே.எம். பாரதி தலைமையிலான அதிகாரிகள் குளச்சல் அருகே ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்த முயன்றபோது, அது நிற்கவில்லை. அதை அதிகாரிகள் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டராம். அதில், 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதேபோல, குளச்சல் வாட்டா் டேங்க அருகே மற்றொரு வாகனத்தில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது. வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். அரிசியை கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி ரூ.8 கோடி மோசடி: தம்பதி கைது

உலகெங்கும் உள்ள திறமைசாலிகள் அமெரிக்கா வரவேண்டும்: அதிபா் டிரம்ப் ஹெச்-1பி விசா நிலைப்பாட்டில் மாற்றம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

கடலூரில் ரூ.9 கோடியில் மருதம் பூங்கா அமைக்கும் பணி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT