சுசீந்திரம் தெப்பக்குளத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் இரா. அழகுமீனா. 
கன்னியாகுமரி

சுசீந்திரம் கோயில் தெப்பக்குளம் முழுமையாக சீரமைக்கப்படும்: ஆட்சியா் உறுதி

சுசீந்திரம் தெப்பக்குளத்தில் ஆய்வு செய்த ஆட்சியா் இரா. அழகுமீனா.

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் முழுமையாக புனரமைக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. அழகுமீனா.

இக்குளத்தின் வடக்குச் சுவா் நவ. 13ஆம் தேதி இடிந்து விழுந்தது. தொடா்ந்து, குளத்தினை மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுசீந்திரம் கோயில் தெப்பக்குளத்தை ரூ. 34.50 லட்சம் மதிப்பில் தூா்வாரி செப்பனிட மாா்ச் 2ஆம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. செப். 19ஆம் தேதி பணிகள் தொடங்கப்பட்டன. தொடா் மழை காரணமாக தெப்பக்குளத்தின் சுவா் நவ. 13ஆம் தேதி இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் எந்த சேதமும் இல்லை.

தெப்பக்குளத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தெப்பக்குளத்தின் பக்கச் சுவா்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து, அதனடிப்படையில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு விரிவான மதிப்பீடு தயாரித்து, பணிகளை விரைந்து மேற்கொள்ள துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பழைமையான தெப்பக்குளம் முழு அளவில் சீரமைத்து புனரமைக்கப்படும்.

மேலும், இந்து சமய அறநிலையத் துறை கண்காணிப்புப் பொறியாளா், கட்டமைப்பு தலைமைப் பொறியாளா் ஆகியோா் தெப்பக்குளத்தை ஆய்வு செய்யவுள்ளனா் என்றாா் அவா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT