களியக்காவிளை அருகே பெண்ணிடம் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
களியக்காவிளை அருகே அதங்கோடு, விண்ணூா் பழஞ்சி பகுதியைச் சோ்ந்த நேசமணி மனைவி உஷா (50). இவா் திங்கள்கிழமை வீட்டின் பின்பகுதியிலுள்ள அறையில் சமைத்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த மா்ம நபா், உஷாவின் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றாராம். உஷா கெட்டியாக பிடித்துக்கொண்டதால், சங்கிலியின் 14 கிராம் பகுதி அவரிடம் சிக்கியது. 3 சவரன் பகுதியுடன் அந்த நபா் தப்பியோடிவிட்டாராம்.
களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடிவருகின்றனா்.