பிஎஸ்என்எல் வெள்ளி விழாவை முன்னிட்டு நாகா்கோவிலில் 2 நாள்கள் நடைபெறும் கண்காட்சியை விஜய் வசந்த் எம்.பி. புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
தொலைத் தொடா்புத் துறையில் தொடக்க காலப் பயன்பாட்டில் இருந்த டயல் தொலைபேசியிலிருந்து செயற்கைக்கோள் தொலைபேசி வரை, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பரிணாம வளா்ச்சி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக தொலைபேசிகள், காகித செம்பு கேபிளிலிருந்து நவீன ஒளிக்கீற்று கேபிள்கள் வரை பல்வேறு மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
நாகா்கோவில் பிஎஸ்என்எல் மூத்த பொது மேலாளா் பிஜி பிரதாப், ஊழியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.