கன்னியாகுமரி

பைக் மீது காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Syndication

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தெங்கம்புதூா் அருகே தெற்கு அஞ்சு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ் (41). தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா். மகேஷின் மனைவி உடல்நலக் குறைவால் களியங்காடு பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், மகேஷ் சனிக்கிழமை இரவு தேநீா் குடிப்பதற்காக அப்பகுதிக்கு பைக்கில் சென்றாராம். அப்போது, அவ்வழியே வந்த காா், பைக் மீது மோதி இழுத்துச் சென்றதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை ஓட்டிவந்த சுங்கான்கடை அருகே ஐக்கியபுரம் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான சொா்ணப்பன் (63) என்பவரிடம் விசாரித்து வருகின்றனா்.

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

SCROLL FOR NEXT