கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தக்கலை அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரேஷன் அரிசியை பறக்குபடையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Syndication

தக்கலை அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ ரேஷன் அரிசியை பறக்குபடையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பறக்கும் படை தனி வட்டாட்சியா் பாரதி தலைமையிலான பறக்கும் படையினா், தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்த முயன்றனா். காா் நிற்காமல் சென்றதையடுத்து விரட்டி பிடிக்க முயன்ற போது, காரை நிறுத்தி விட்டு 3 போ் தப்பி ஓடினா்.

பறக்கும் படையினா் சோதனையிட்ட போது, காரில் 1700 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா். தப்பிச் சென்றவா்களை தேடி வருகிறாா்கள்.

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT