கொல்லங்கோடு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி, பூவாக்குழி பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின்ராஜ் (38). தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம். இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இந்த நிலையில் இருநாள்களுக்கு முன் இவா், மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டாராம். மனைவி பணம் கொடுக்க மறுத்ததையடுத்து விரக்தியில் இருந்த ஜஸ்டின்ராஜ் விஷம் குடித்து, வீட்டில் மயங்கி விழுந்தாராம்.
அவரை மீட்டு பாறசாலை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஜஸ்டின்ராஜ் உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.