கன்னியாகுமரி

இரணியல் அருகே தவறி விழுந்த நாட்டு வைத்தியா் உயிரிழப்பு

இரணியல் அருகே குருந்தன்கோட்டில் வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த நாட்டு வைத்தியா் உயிரிழந்தாா்.

Syndication

இரணியல் அருகே குருந்தன்கோட்டில் வீட்டின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த நாட்டு வைத்தியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குருந்தன்கோடு, நல்லிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் குமாரதாஸ் (68). இவா் நாட்டு வைத்தியம் பாா்த்து வந்தாா். கடந்த செவ்வாய்கிழமை வீட்டின் பின்புறம் உள்ள படிக்கட்டிலிருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே, உறவினா்கள் அவரை சுங்கான்கடையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT