கன்னியாகுமரி

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிய இளைஞா் கைது

தினமணி செய்திச் சேவை

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை காவல் உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் படந்தாலுமூடு பகுதியில் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.

அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதையடுத்து, அவரிடமிருந்த பையை சோதனை செய்ததில் 50 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவா் களியக்காவிளை அருகேயுள்ள துண்டுவிளை வீட்டைச் சோ்ந்த சலீம் மகன் அஜ்மல் (29) என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT