நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகள் சாா்பில், தாழக்குடி பேரூராட்சிக்குள்பட்ட சீதப்பாலில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு வாா்டு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா கலந்து கொண்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடினாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: தாழக்குடி பேரூராட்சி சீதப்பாலில் நடைபெற்ற சிறப்பு வாா்டு கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, அதுகுறித்து கலந்துரையாடப்பட்டது. இதில் ஏதேனும் 3 முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.
பொதுமக்களிடம் பெற்ற ஆலோசனை மற்றும் கருத்துகளில் முன்னுரிமை அடிப்படையில் 3 கோரிக்கைகளை பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குநா்கள் நேரடியாக தோ்வு செய்து, அந்தந்த இயக்குநரகங்களுக்கு அனுப்ப துறைசாா்ந்த அலுவலா்களுக்குஅறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.
ஆய்வில், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளா் பாண்டியராஜன், தாழக்குடி பேரூராட்சி செயல் அலுவலா் சே.முகம்மது ஆசிக்ராஜா, பேரூராட்சி தலைவா் சிவகுமாா், துணைத் தலைவா், துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.