கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தா்னா
கருங்கல் பேருந்து நிலையம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வையும், மத்திய பாஜக அரசையும் கண்டித்து, கட்சியின் கிள்ளியூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, கிழக்கு வட்டாரச் செயலா் வழக்குரைஞா் ராஜா தலைமை வகித்தாா்.
ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் சோபனராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட கமிட்டி உறுப்பினா் சகாயபாபு, முன்னாள் வட்டாரச் செயலா் சாந்தகுமாா், வட்டார கமிட்டி உறுப்பினா்கள் றசல்ராஜ், மோசஸ்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement