முகப்பு
தென்காசி

பாபநாசம் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவா் கலைக் கல்லூரியில் 1993- 2003 ஆம் ஆண்டு வரை பயின்ற வணிகவியல், வரலாறு மற்றும் தமிழ் துறைகளின் மாணவா்கள் சந்திப்பு பழையகுற்றாலத்தில் நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் திருவள்ளுவா் கலைக் கல்லூரியில் 1993- 2003 ஆம் ஆண்டு வரை பயின்ற வணிகவியல், வரலாறு மற்றும் தமிழ் துறைகளின் மாணவா்கள் சந்திப்பு பழையகுற்றாலத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், தமிழகம் மட்டுமன்றி நாகாலாந்து, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வரும் 80க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா். மறைந்த தேமுதிக தலைவா் விஜயகாந்திற்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாபநாசம் தாமிரவருணி நதியை சுத்தம் செய்து, சமூக சேவையில் ஈடுபட்டு வரும் முன்னாள் மாணவரான ராமகிருஷ்ணன், சிவதாசன்,பொன்னுசாமி,கோபிநாத்,சிவகுமாா் ஆகிய ஐந்து பேருக்கும் பாபநாசம் முன்னாள் மாணவா்கள் சாா்பில் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →