தென்காசி

முதல்வா் மு.க. ஸ்டாலின் அக். 24, 25-இல் தென்காசி வருகை: மாவட்ட பொறுப்பாளா் தகவல்

பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்க அக். 24, 25ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகிறாா்.

தினமணி செய்திச் சேவை

பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்க அக். 24, 25ஆம் தேதி முதல்வா் மு.க. ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகிறாா்.

இது தொடா்பாக, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபபாலன் செய்தியாளா்களிடம் கூறியதாவது,

அக். 24, 25 ஆகிய தேதிகளில் தென்காசிக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகிறாா். தென்காசி மங்கம்மா சாலை, இலத்தூா் விலக்கு-ஆய்க்குடி சாலை சந்திக்கும் பகுதியில் பெட்ரோல் நிலையம் பின்புறம் உள்ள மைதானத்தை நிகழ்ச்சிக்கான இடமாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் ஆகியோா் தோ்வு செய்துள்ளனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. அரவிந்த் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

அக். 24ஆம் தேதி காலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும் முதல்வா், அங்கிருந்து கோவில்பட்டி சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மாலை 4 மணிக்கு சங்கரன்கோவில் வழியாக குற்றாலம் வரவுள்ளாா்.

அக். 25ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறாா் என்றாா் அவா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT