திருநெல்வேலி

மூன்றடைப்பு அருகே விவசாயி வெட்டிக் கொலை

மூன்றடைப்பு அருகே சொத்து தகராறில் புதன்கிழமை விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக  தந்தை, மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN

மூன்றடைப்பு அருகே சொத்து தகராறில் புதன்கிழமை விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக  தந்தை, மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.
 மூன்றடைப்பு அருகே உள்ள பாணான்குளத்தைச் சேர்ந்த செங்கமலஉடையார்  மகன் ஆறுமுகம் என்ற ஓமகுச்சி(39), விவசாயி. ஆறுமுகம் குடும்பத்திற்கும், அவரது சித்தப்பா  குடும்பத்திற்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் உள்ளதாம்.
 தோட்டத்தில் உள்ள பொதுகிணற்றிலிருந்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாகவும் இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குமிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுமாம். இந்நிலையில் ஆறுமுகம் புதன்கிழமை பிற்பகல் தனது தோட்டத்திற்கு சென்ற போது, அவரது சித்தப்பா ஆறுமுகத்தின் மகன் கண்ணன் அங்கு வந்தாராம். அப்போது இருவருக்குமிடையே தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாம்.
 இதில் ஆத்திரமடைந்த கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆறுமுகத்தை வெட்டிவிட்டு தலைமறைவாகி விட்டாராம். பலத்த காயமடைந்த ஆறுமுகம் அதே இடத்தில் உயிரிழந்தாராம். தகவலின் பேரில் நான்குனேரி ஏ.எஸ்.பி.அருண் பாலகோபாலன், மூன்றடைப்பு காவல் ஆய்வாளர் திலகம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து கண்ணன், அவரது தந்தை ஆறுமுகம் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சி காப்பகத்தில் மாடுகள் பராமரிப்பு: விருப்ப மனுக்கள் வரவேற்பு!

காற்று மாசைக் கட்டுப்படுத்த நிபுணா் குழு: தில்லி அரசு அமைப்பு!

108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்குப் பிரசவம்

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்! ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் 43 போ் கைது

SCROLL FOR NEXT