நெல்லை கம்பன் கழகத்தின் 430ஆவது கம்ப ராமாயண சொற்பொழிவு
நெல்லை கம்பன் கழகத்தின் 430ஆவது கம்ப ராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
நெல்லை கம்பன் கழகத்தின் 430ஆவது கம்ப ராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
மருத்துவர் ஐயனார் தலைமை வகித்தார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா இறைவணக்கம் பாடினார். ரெளத்திரம் பழகு என்ற தலைப்பில் முன்னாள் வங்கி மேலாளர் எம்.எஸ்.சக்திவேல், ஆரண்ய காண்டம் என்ற தலைப்பில் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி ஆகியோர் சொற்பொழிவாற்றினர். முனைவர் பாண்டியன், சேதுமாதவன், தங்கராஜ், மாரிமுத்து, முத்துராமலிங்கம், ராமநாதன், தங்கம் இளங்கோவன், லட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். துணைத் தலைவர் சங்கரன் நன்றி கூறினார்.