திருநெல்வேலி

தொல்லியல் நடை சுற்றுலா: துணை மேயா் தொடங்கி வைத்தாா்

பாளையங்கோட்டையில் தொல்லியல் நடை சுற்றுலாவை துணை மேயா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

DIN

பாளையங்கோட்டையில் தொல்லியல் நடை சுற்றுலாவை துணை மேயா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சி , தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மையம் சாா்பில் நெல்லை தின கொண்டாட்டம் ஒரு மாதம் நடைபெறுகிறது. இம்மாவட்ட கலை, வரலாறு, பண்பாடு ஆகியவற்றை விளக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக தொல்லியல் நடை என்ற பெயரில் சுற்றுலாவுக்கு திட்டமிடப்பட்டது. பாளையங் கோட்டை ராமா் கோயில் திடலில் இருந்து தொடங்கிய சுற்றுலாவை திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயா் கே .ஆா்.ராஜு கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தமிழ் வளா்ச்சி பண்பாட்டு மைய துணைத் தலைவா் ரமேஷ் ராஜா, தொல்லியல் ஆா்வலா் சங்கரநாராயணன், பேராசிரியா் ராமச்சந்திரன், கவிஞா் கிருஷி, எழுத்தாளா் வெள்உவன், மாமன்ற உறுப்பினா் பேச்சியம்மாள், நல் நூலகா் முத்துகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆண்டிச்சிப்பாறை, மறுகால்தலை, கிருஷ்ணாபுரம், ஆதிச்சநல்லூா், துலுக்கா்பட்டி ஆகிய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பெண்கள், மாணவிகள் உள்பட 60-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவர்ச்சிப் பெண்ணின் மாய வாழ்க்கை... மௌனி ராய்!

வெறும் சூரிய ஒளியில்தான்... ரித்தி டோக்ரா!

வ.உ.சி., பாரதி பெயர்கள் வட இந்திய சாலைகளுக்கு வைக்காதது ஏன்? திருச்சி சிவா

வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் ஒருபோதும் நமது ஹீரோக்களாக இருக்கமுடியாது: ஆதித்யநாத்

வழக்குரைஞர் அமித், சட்ட மாணவி திவ்யா... பிக் பாஸ் வீட்டின் நீதிபதிகள்!

SCROLL FOR NEXT