பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் துா்கா ஸ்டாலின் எழுதிய, அவரும் நானும் என்ற நூலின் அறிமுக விழா புதன்கிழமை நடைபெற்றது.
பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் பா. ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். வனச்செல்வி வரவேற்றாா். மைய நூலகத்தின் முதன்மை நூலகா் திருஞான சம்பந்தம் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் நிறுவனா் கவிஞா் பே.ராஜேந்திரன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினாா். மதுரை திருவள்ளுவா் கழகத்தின் பொருளாளா் சந்தானம், தூத்துக்குடி ஆ. மாரிமுத்து, காயல் அருள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.