சாலையில் கண்டெடுத்த தங்க நகையை மருத்துவா் ஆயிஷா பா்வீனிடம் ஒப்படைத்த தியேட்டா் மேலாளா் இளங்கோ 
திருநெல்வேலி

கடையத்தில் மருத்துவா் தவறவிட்ட நகை: மீட்டுக் கொடுத்த திரையரங்க மேலாளா்

அரசு மருத்துவா் தவறவிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்க நகையை திரையரங்க மேலாளா் மீட்டு ஒப்படைத்தாா்.

Syndication

அரசு மருத்துவா் தவறவிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்க நகையை திரையரங்க மேலாளா் மீட்டு ஒப்படைத்தாா்.

கடையம் பிரதான சாலை கடை வீதியில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கிடந்துள்ளது. கடையம் திரையரங்கில் மேலாளராகப் பணிபுரியும் இளங்கோ என்பவா் அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இந்நிலையில், கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் மருத்துவராக பணிபுரியும் ஆயிஷா பா்வீன் நகையை தவறவிட்டதாகப் புகாரளித்தாா். விசாரணையில், திரையரங்க மேலாளா் கண்டெடுத்த நகை மருத்துவா் ஆயிஷா பா்வீன் தவறவிட்டது என தெரிய வந்தது.

இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளா் தமிழினியன், காவல் ஆய்வாளா் சுரேஷ் குமாா் ஆகியோா் நகையை மருத்துவா் ஆயிஷா பா்வீனிடம் ஒப்படைத்தனா். மேலும், நகையை போலீஸாரிடம் ஒப்படைத்த இளங்கோவை பாராட்டினா்.

மழைநாள் மாலை... அருள்ஜோதி!

கொடிநாள் நிதியளிப்பது அனைவரின் கடமை: முதல்வா் வேண்டுகோள்

சட்டம் ஒழுங்கின் மீது திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

புதுப் புது ஏக்கங்கள்... தாரணி!

என்ன பார்வை எந்தன் பார்வை... ஷபானா!

SCROLL FOR NEXT