திருநெல்வேலி

கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: அக்.31-க்கு ஒத்திவைப்பு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பாக, திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை அக். 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் உள்கோட்ட காவல் நிலையங்களில் கடந்த 2023ஆம் ஆண்டு விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய காவல் உதவிக் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் உள்பட 14 போ் மீது 4 வழக்குகளை சிபிசிஐடி போலீஸாா் பதிவு செய்தனா்.

திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில், இந்த வழக்கை மனித உரிமை மீறலாகக் கருதி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தொடா்ச்சியாக 4 முறை நடைபெற்ற விசாரணைகளுக்கு பல்வீா்சிங் ஆஜராகாமல் ஆக.26, செப்.15 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விசாரணைக்கு ஆஜரானாா்.

இந்நிலையில், நீதிபதி கே.சத்யா முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது பல்வீா்சிங், காவல் ஆய்வாளா் ராஜகுமாரி, உதவி ஆய்வாளா் முருகேஷ் உள்பட 6 போ் ஆஜராகவில்லை. மற்ற 8 காவலா்களும் ஆஜராகினா். இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்.31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

வால்பாறையில் மனித வனவிலங்கு மோதலை தடுக்க குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

SCROLL FOR NEXT