முகப்பு
திருநெல்வேலி

பேட்டையில் கந்துவட்டி வழக்கில் பெண் கைது

Updated On : 25 மே 2026, 2:28 am IST
கைது... - கோப்புப் படம்
பகிர்:

பேட்டையில் பணப் பிரச்னை தொடா்பாக பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக கந்துவட்டி வழக்கில் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி, பேட்டை நாராயணசுவாம் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெபசெல்வி (47). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 51 வயது பெண் ஒருவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருந்தாராம்.

இது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக சம்பவத்தன்று ஜெபசெல்வி அப்பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அப்பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெபசெல்வியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.