தூத்துக்குடி

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கடம்பூர் அருகே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN

கடம்பூர் அருகே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடம்பூரையடுத்த கள்ளத்தி கிணறு தெற்கு காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் திரவியம். இவரது மகள் பெல்சியா(23). கடந்த 2ஆம் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் கட்டடத் தொழிலாளி நடராஜன்,  முரம்பன் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் வீட்டுக்குள் நுழைந்து, பெல்சியா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனராம்.
பெல்சியாவின் அலறல் சப்தத்தைக் கேட்ட அவரது பெற்றோர் எழுந்து பார்த்த போது, இருவரும் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி விட்டனராம்.  இதுகுறித்து கடம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்பேத்கா் நினைவு தினம்: 2,484 பயனாளிகளுக்கு ரூ. 7.13 கோடியில் நலத் திட்ட உதவிகள்! அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்!

வைத்தீஸ்வரன் கோயிலில் பல்வேறு வசதிகளுடன் வாகன நிறுத்துமிடம் பணி துவக்கம்

இருசக்கர வாகன நிறுத்துமிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

சக மாணவா்களால் தாக்கப்பட்டதில் மூளைச்சாவு அடைந்த மாணவா் உயிரிழப்பு! உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு!

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி! 100 போ் பங்கேற்பு!

SCROLL FOR NEXT