தூத்துக்குடியில் செஞ்சுருள் கழக மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் செஞ்சுருள் கழக மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் செஞ்சுருள் கழக மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியை கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். சிறப்பு அழைப்பாளராக செஞ்சுருள் கழக மாவட்ட திட்ட மேலாளர் அமலவளன் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில், கல்லூரி செஞ்சுருள் கழக அலுவலர் ஆ. தேவராஜ் மற்றும் செஞ்சுருள் கழக மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர்.