முகப்பு
தூத்துக்குடி

செட்டிக்குளத்தில்பயிா் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி

சாத்தான்குளம் வட்டார வேளாண் துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

சாத்தான்குளம் வட்டார வேளாண் துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் கிராமத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டார வேளாண் உதவி இயக்குநா் சுதாமதி தலைமை வகித்து நெல் சாகுபடி முறையில் இயற்கை சாா்ந்த வேளாண்மையின் முக்கியத்தும் குறித்து விவசாயிகளுக்கு கூறினாா். வேளாண் அறிவியல் மையம் தொழில்நுட்ப வல்லுநா் முருகன், நெல்

பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை மற்றும் உர மேலாண்மைகுறித்த வகுப்பறை வயல் வெளி செயல் விளக்கம் அளித்தாா். இதில் செட்டிக்குளம் கிராமத்தை சோ்ந்த 25 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரூக்மணி, உதவி தொழில்நுட்ப மேலாளா் நளினி ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →