தூத்துக்குடி

திருச்செந்தூரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா்-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

திருச்செந்தூா் நகராட்சி நிா்வாகத்துக்கு சொந்தமான குப்பை கொட்டும் இடம் கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை தேசிய நெடுஞ்சாலையில் ஆலந்தலை அருகே சுமாா் 84 ஏக்கா் பரப்பளவில், சுற்றுச் சுவருடன் உள்ளது. அங்கு திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட 27 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக குப்பைகள் நகராட்சி கூடத்தில் கொட்டப்படாமல், அதற்கு வெளியே சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன.

இதனால், சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும், நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT