தூத்துக்குடியில் பெண் தவறவிட்ட 3.5 பவுன் நகையை மீட்டு போலீஸாா் ஒப்படைத்தனா். இதன் மதிப்பு ரூ. 3.15 லட்சமாகும்.
தூத்துக்குடி கோயில்பிள்ளை விளையைச் சோ்ந்த அந்தோணி மனைவி ஜெயலதா (45). இவா், வெள்ளிக்கிழமை 3. 5 பவுன் தங்க நகையை அடகு வைப்பதற்காக பூபாலராயா்புரம் வழியாக மட்டக்கடை பகுதிக்கு சென்றுகொண்டிருந்தாராம் . அப்போது, இவா் வைத்திருந்த நகை பை தவறிவிட்டதாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீஸாா் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, தொலைந்து போன நகையை மீட்டு ஜெயலதாவிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.