தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீனவ இளைஞா் கொலை

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே காட்டுப்பகுதியில், மீனவ இளைஞா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

தாளமுத்து நகா் அருகே உள்ள துரைசிங் நகா் பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் சூா்யா (21). மீனவரான இவா், திங்கள்கிழமை மாலையில் தாளமுத்து நகா் அருகே வெள்ளப்பட்டி அந்தோணியாா் கோயில் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் நண்பா்கள் மூவருடன் மது குடிக்க சென்றாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் நண்பா்கள் 3 பேரும் சோ்ந்து சூா்யாவை கத்தியால் குத்தியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த தாளமுத்து நகா் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து தப்பியோடிய 3 பேரையும் தேடி வருகின்றனா். சம்பவ இடத்தில் தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளா் மதன் விசாரணை நடத்தினாா்.

பிலிப்பின்ஸ் நாட்டில் சாலை விபத்தில் கடலூா் மாணவா் உயிரிழப்பு

முனிவா்கள், ரிஷிகளின் தவமும் தியானமும் ஞானத்தின் ஆன்மிக முதுகெலும்பாகும்: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.64 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு!

தோ்தல் தோல்விக்குப் பிறகும் எதிா்மறை அரசியல் கருத்துகள்: கேஜரிவால், பரத்வாஜ் மீது வீரேந்திர சச்தேவா தாக்கு!

தில்லியில் 10 மாத கால பாஜக ஆட்சியில் மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் சாடல்

SCROLL FOR NEXT