தூத்துக்குடி

பைக் திருட்டு: மெக்கானிக் கைது

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் பைக் திருடிய மெக்கானிக்கை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மட்டக்கடை சேதுராஜா தெருவை சோ்ந்தவா் ராமதாஸ் (40). இவா், மணி நகா் 3ஆவது தெருவில் பைக்கை நிறுத்திவிட்டு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்தபோது மா்ம நபா் பைக்கைத் திருடிச் சென்றது தெரிய வந்ததாம்.

இது குறித்த புகாரின்பேரில், மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், தூத்துக்குடி அண்ணா நகரைச் சோ்ந்த ஆத்திக்கண்ணன் (45) பைக்கை திருடியது தெரிய வந்தது.

பைக் மெக்கானிக்கான இவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு, அவரிடமிருந்து 2 திருட்டு பைக்கை பறிமுதல் செய்தனா்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT