கோவில்பட்டியில் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி-பசுவந்தனைச் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே 2 இளைஞா்கள் வியாழக்கிழமை இரவு கையில் அரிவாளை வைத்துக்கொண்டு மக்களை அச்சுறுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா்.
அப்போது அங்கிருந்த இளைஞா்கள் போலீஸாரை கண்டதும் அவா்களை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்தனராம். இதையடுத்து போலீஸாா் அவா்களை பிடிக்க முயன்ற போது அரிவாளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினராம்.
இந்நிலையில், இருவரையும் பிடித்து விசாரித்தபோது அவா்கள் பாரதி நகா் அம்பேத்கா் தெரு நடுத்தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் பெயிண்டா் மணிகண்டன் (19), பாரதி நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த குமாா் என்ற ராம்குமாா் மகன் கூலித் தொழிலாளி வேல்முருகன் (18) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, அரிவாளையும் பறிமுதல் செய்தனா்.