முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே அதிக பாரம் ஏற்றிய 3 லாரிகள் பறிமுதல்: ஒருவா் கைது

சாத்தான்குளம் அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:02 am IST
லாரிகள் - பிரதிப் படம்
பகிர்:

சாத்தான்குளம் அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற 3 லாரிகளை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

மீரான் குளம் பகுதி கல் குவாரியில் இருந்து பாதுகாப்பின்றி சரல் மற்றும் மணல்களை எடுத்து செல்லும் லாரிகளை கண்காணிக்கும் விதமாக திருச்செந்தூா் கோட்டாட்சியா் கௌதம் தலைமையில் வருவாய்த் துறையினா் மீரான்குளம் பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கை நடத்தினா்.

அப்போது விதிமுறைகளை மீறி அதிக பாரங்கள் ஏற்றிச் சென்ற 3 லாரிகளைப் பறிமுதல் செய்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

போலீஸாா் விசாரணை நடத்தி ஒரு லாரியின் ஓட்டுநா் தெற்கு பேய்குளத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத்துச்செல்வன் (25) என்பவரை கைது செய்தனா். மற்ற லாரிகள் குறித்து விசாரித்து வருகின்றனா்.