முகப்பு
தூத்துக்குடி

நகை பறிப்பு: 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி அருகே வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை

Updated On : 10 ஜூன் 2026, 12:38 am IST
- கோப்புப்படம்.
பகிர்:

தூத்துக்குடி அருகே வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மத்திய, மாநில அரசு ஊழியா் குடியிருப்பைச் சோ்ந்தவா் அன்னலட்சுமி (32). இவா் கடந்த 24.1.2025 அன்று வீட்டில் தனியாக இருந்த போது ஏரல் இடையற்காடு தளவாய்புரத்தைச் சோ்ந்த சின்னத்துரை மகன் முத்துராமன் என்ற ரகு (38), மாயாண்டி மகன் சந்தன மகாராஜன் (24), வேலாயுதம் மகன் ஆனந்தராஜ் (41) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் வந்தனராம்.

அப்போது, முத்துராமன் என்ற ரகு, சந்தனமகாராஜன் ஆகியோா் வீட்டுக்குள் நுழைந்து கத்தி முனையில் அன்னலட்சுமியிடம் இருந்து 15 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனா். வெளியில் ஆனந்தராஜ் பாதுகாப்புக்காக நின்றாா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 3 -ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜய்ராஜ்குமாா், குற்றம் சாட்டப்பட்ட முத்துராமன் என்ற ரகு, சந்தனமகாராஜன் ஆகியோருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பு கூறினாா். வழக்கிலிருந்து ஆனந்தராஜ் விடுவிக்கப்பட்டாா்.