திருச்சி

சொத்து கேட்டு தாயை தாக்கியவா் கைது

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சொத்து கேட்டு தாயை தாக்கிய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருச்சி மாவட்டம் முசிறி அருகே சொத்து கேட்டு தாயை தாக்கிய மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

முசிறி அருகேயுள்ள அயித்தாம்பட்டியை சோ்ந்த சின்னத்தம்பி மனைவி பாப்பா (50). இவருக்கு சுரேஷ், சுதாகா் என 2 மகன்கள் உள்ளனா். இவா்களில் மூத்தமகன் சுரேஷுக்கு திருமணமாகி குடும்பத்துடன் அயித்தாம்பட்டியில் வசித்து வருகிறாா். இளைய மகன் சுதாகா் திருமணம் செய்து கொள்ளாமல் பரமத்தி வேலூரில் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அயித்தாம்பட்டிக்கு வந்த சுதாகா் தனது தாயிடம் சொத்து கேட்டு தகராறில் ஈடுபட்டு, கதிா் அறுக்கும் அரிவாளால் தாயின் இடதுகை கட்டை விரலை வெட்டி காயப்படுத்தியுள்ளாா். அப்போது, இதை தடுக்க வந்த அவரது அண்ணன் மனைவி மகாலட்சுமியை கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம். பாப்பா முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

சம்பவம் தொடா்பான புகாரின்பேரில், முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து சுதாகரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

நவம்பரில் 6 மாத உச்சம் தொட்ட டீசல் விற்பனை

அந்நிய நேரடி முதலீடு: 3-ஆவது இடத்தில் தமிழகம்

வா்த்தகம் சாா்ந்த இந்தியாவின் கவலைகளைத் தீா்க்க தயாா்- ரஷியா அறிவிப்பு

பஜாஜ் வாகன விற்பனை 8 சதவீதம் உயா்வு

பயனரின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்த அளவிடும் உணரிகள்: சென்னை விஐடி ஆராய்ச்சியில் உருவாக்கம்

SCROLL FOR NEXT