திருச்சி

காா் மோதி இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞா் மீது காா் மோதியதில் அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலகொண்டையம்பட்டி தெற்கு வீதியைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் கண்ணன் (33). இவா், ஸ்ரீரங்கம் கன்னிமாா் தோப்பு பகுதியில் உள்ள பேக்கரி முன்பு ஞாயிற்றுக்கிழமை இரவு நின்றிருந்தாா்.

அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத காா் கண்ணன் மீது மோதியதில், பலத்த காயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

டிஐஏ திட்டத்தின் கீழ் வைர இறக்குமதிக்கு வரி விலக்கு!

பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் ‘டீப் ஃபேக்’! ஆன்லைனில் அதிகரிக்கும் வன்முறை - ஐ.நா. கவலை!

இரவில் இரு மாவட்டங்களில் மழை பெய்யும்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

SCROLL FOR NEXT