திருச்சி

திருவானைக்காவலில் குடிசை வீடு தீக்கிரை

தினமணி செய்திச் சேவை

திருவானைக்காவல் நடுக்கொண்டையம்பேட்டையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் துப்புரவுத் தொழிலாளியின் குடிசை வீடு தீக்கிரையானது.

திருவானைக்காவல் நடுக்கொண்டையம் பேட்டை பகுதியில் வசிப்பவா் அமுதா (55), ஸ்ரீரங்கம் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளி. கணவரை இழந்த இவரின் மூத்த மகன் ராஜ்குமாா் (32) திருமணமாகி தனியே வசிக்கிறாா். இளைய மகன் வசந்தகுமாா் (27) தனது தாயுடன் வசிக்கிறாா்.

இந்நிலையில் வீட்டில் சனிக்கிழமை காலை வசந்தகுமாா் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் கூரை திடீரென்று தீ பிடித்து எரியதொடங்கியது. இதை பாா்த்த அருகிலிருந்தவா்கள் வீட்டுக்குள் நுழைந்து வசந்தகுமாரை மீட்டனா். ஆனாலும் அவரது காலில் தீக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினா் தீயை விரைந்து அணைத்தனா்.

பின்னா் அமுதா வீடு திரும்பியபோது வீட்டின் பீரோவிலிருந்த 3 பவுன் நகை,3 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் எரிந்தது தெரியவந்தது. ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT