முகப்பு
திருச்சி

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் படுகாயம்

Updated On : 25 மே 2026, 2:24 am IST
கிணறு. - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை தவறி விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா்.

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகம் சன்னதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). இவா் தனது நண்பா் பாலமுருகன் என்பவருடன் திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள ஜம்புமடை பகுதி கோயில் கட்டுமான வேலைக்கு வந்திருந்தாா்.

இந்நிலையில், அப்பகுதி கிணற்றில் இருந்த தேன்கூட்டில் ஞாயிற்றுக்கிழமை தேன் எடுக்க முயன்ற மணிகண்டன் திடீரென தவறி கிணற்றுக்குள் விழுந்து படுகாயமடைந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வந்த தா.பேட்டை காவல் நிலைய போலீஸாா், முசிறி தீயணைப்பு நிலையத்தினா் கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி, மணிகண்டனை மீட்டனா். பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மணிகண்டன் சோ்க்கப்பட்டாா். தா.பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.